செவ்வாய், 23 மே, 2023

பாடல் (13) கோள்கள் நற்பலன் தரும் காலம் !

 

இடையில்     மட்டும்        பலனைத்      தருவர்

இலங்கும்     குரு,சுக்       கிரனெனும்    இருவர் !

கடையில்     மட்டும்        பலனைத்      தருவர்

காரியன்       ராகாம்        கேதெனும்     மூவர் !

தொடக்க      நிலையில்     பலனைத்      தருவர்

தோமில்       சூரியன்        குசனெனும்    இருவர் !

தடங்கல்      இன்றியே      எல்லாக்       காலமும்

தருவர்        தண்மதி       புதனெனும்    இணையே !

--------------------------------------------------------------------------------

இடையில் மட்டும் = தசாபுத்தியின் நடுப்பகுதியில் மட்டும்

கடையில் மட்டும் = தசாபுத்தியின் பின்பகுதியில் மட்டும்

காரியன் = சனி

தோமில் = குற்றங் குறைகளற்ற

குசன் = செவ்வாய்

தண்மதி = சந்திரன்

-----------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(maraimani2021@gmail.com)

ஆட்சியர்,

“கணியப்பாடல்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2054,விடை (வைகாசி) 09]

{23-05-2023}

-----------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக