உச்சப் பாவகம் உரைக்குவல் கேளீர் !
செச்சை ஞாயிறு செம்மதி காளை !
சுறவம் செவ்வாய் சூழ்புதன் கன்னி !
குருமனை கடகம் கூன்மீன் வெள்ளி !
காரியன் துலையில் கரும்பணி விடையில் !
பூரியன் கேது போந்தனன் தேளே !
--------------------------------------------------------------------------------------
செச்சை = (ஆட்டுக் கடா) மேழம்
ஞாயிறு = சூரியன்
மதி = சந்திரன்
காளை = ரிஷபம்
சுறவம் = சுறா (மகரம்)
கூன்மீன் = மீனம்
வெள்ளி = சுக்கிரன்
காரி = சனி
துலை = துலாம்
கரும்பணி = (கரும்பாம்பு) இராகு
பூரியன் = தீயவன்
போந்தனன் = வந்தடைதல்
தேளே = விருச்சிகம்
--------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
“கணியப்பாடல்” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2054, சுறவம் (தை) 02]
{16-01-2023}
---------------------------------------------------------------------------------------