ஒன்றாம் பாவம் உடலுயிர் தோற்றம்
உரைத்திடு மென்பதை உணர்வாய் நீயே
!
நன்றாம் இரண்டே நயனம், குடும்பம்,
நவநிதி, வாக்கு, நன்மொழி இடமே
!
மூன்றாம் பாவம் முழங்கும் இளங்கிளை,
முறைமைப் பேச்சு, முனை,புகழ் ஈன்மே
!
நான்காம் பாவம் நற்றாய், உறவினர்,
நன்செய், கல்வி, நல்வாழ் வினையே
!
ஐந்தாம் பாவம் அம்மான், சந்ததி,
ஆழ்மேல் படிப்பு, அனைத்தும் கழறும்
!
பைந்தொடி ! ஆறாம்
பாவம் நோய்நொடி,
பகைமை, வழக்கு
பகர்வது உண்மை
!
ஏழாம் பாவம் இல்லறத் துணையே,
இணைகூட் டாளிகள், மாரகம் சொல்லும் !
தாழரை எட்டாம் தானம் என்பது
தமரக ஆயுள், தன்விதி, முடிவு
!
ஒன்பது என்பது உயிர்மெய் தந்தை,
உயர்குணம், பக்தி, உரைத்திடும் இடமே
!
மன்பதை வாழ்வில் மானிடர் சீவனம்,
மதிமை, ஆளுமை, மதிப்பிடம் பத்தே
!
உன்னதம், லாபம், உடன்பிற தமயன்,
உதரத் தமக்கை, உரைபதி னொன்றே
!
பன்னிரண் டென்பது பகரும் விரயம்,
பைந்தொடி ! இதுவே பல்லிடப் பலனே
!
----------------------------------------------------------------------------------------
பாவம் = இடம்
உடலுயிர் தோற்றம் = உடல், உயிர், தோற்றப்பொலிவு
நயனம் = கண்கள்
நவநிதி = செல்வம்
நன்மொழி = வாக்கு சுத்தம்
இளங்கிளை = தம்பி, தங்கை
முறைமைப் பேச்சு = முறையாகப் பேசுதல்
முனை = துணிச்சல்
ஈன்மே ! = தருமே !
நற்றாய் = தாய்
நல்வாழ்வு = சுக வாழ்வு
அம்மான் = தாய் மாமன்
சந்ததி = புத்திரர்கள்
ஆழ் =
ஆழ்மனம்
மேல்படிப்பு = உயர்கல்வி
இல்லறத் துணை = களத்திரம்
கூட்டாளிகள் = வணிகக் கூட்டாளிகள்
மாரகம் = உயிர் துறப்பு
தாழறை = (சிறிய அறை ) இராசி வீடு
தானம் = ஸ்தானம்
தமரகம் = சுவாசக் குழல்
தன்விதி முடிவு = விதி முடிவு
சீவனம் = ஜீவனம்
ஆளுமை = உத்தியோகம்
--------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
“கணியப்பாடல்” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2054,விடை (வைகாசி) 09]
{23-05-2023}
---------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக